அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவது குறித்து இரவில் யோசிப்பீர்களா? என உள்ளூர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டபோது, இணையத்தில் ‘நெட்ஃபிளிக்ஸ்’ தொலைக்காட்சி பார்ப்பேன் என ரணில் விக்கிரமசிங்க அளித்த பதில் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பத்திரிகையாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய நேர்காணலின் போது, இரவு நேரங்களில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்துச் சிந்திப்பீர்களா? எனக் கேள்வி எழுப்பட்டது.
இதற்குப் பதிலளிக்கும்போதே இரவில் ‘நெட்ஃபிளிக்ஸ்’ தொகைக்காட்சி பார்ப்பேன் என ரணில் கூறினார்.
இதேவேளை, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்தத் தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை எவையும் தங்களுக்கு விடுக்கப்படவில்லை என்றார்.
இந்தத் தாக்குதலில் பின்னர் அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவதை தான் உறுதி செய்ததாக அவர் தெரிவித்தார்.